News August 24, 2024

சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை கடற்கரை – விழுப்புரம், கடற்கரை – எழும்பூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இரவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு வழித்தடங்களிலும் இன்றிரவு 10.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.10, 9.30 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 18, 2025

செங்கல்பட்டு:பால் பண்ணை அமைக்க ரூ.1.67 லட்சம்!

image

1) செங்கல்பட்டு மக்களே., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் ரூ.1.67 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. 2) பால் பண்ணை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும். 3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு. 4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

News December 18, 2025

செங்கல்பட்டு உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

செங்கல்பட்டு உழவர் சந்தையில் 1 கிலோ (பெ-வெங்காயம்) ரூ.30, (சி-வெங்காயம்) ரூ.47, (தக்காளி) ரூ.39, (மிளகாய்) ரூ.46, (பீட்ரூட்) ரூ.32, (உருளைக்கிழங்கு) ரூ.36, (பாகற்காய்) ரூ.38, (சுரைக்காய்) ரூ.35, (பட்டர் பீன்ஸ்) ரூ.47, (அவரைக்காய்) ரூ.38, (கத்திரிக்காய்) ரூ.41, (சேனைக்கிழங்கு) ரூ.40, (பீன்ஸ்) ரூ.55, (பூண்டு) ரூ.95, (இஞ்சி) ரூ.72, (புடலங்காய்) ரூ.36, (முள்ளங்கி) ரூ.31 விலையில் விற்பனையாகிறது.

News December 18, 2025

செங்கல்பட்டு: ரயில் இடித்து முதியவர் பரிதாப பலி

image

காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, பரனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

error: Content is protected !!