News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<> mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

Similar News

News November 27, 2025

திருச்சிற்றம்பலம் அருகே குட்கா கடத்தியவர் கைது

image

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள கோரவயல்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றவரை போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் மூட்டையில் தடை செய்யப்பட்ட சுமார் 39 கிலோ எடையுள்ள குட்கா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட சித்துக்காடு அரண்மனைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

News November 27, 2025

தஞ்சை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சாவூர் மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

BREAKING: தஞ்சை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

image

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.28 (நாளை) மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!

error: Content is protected !!