News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<> mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

Similar News

News November 26, 2025

தஞ்சாவூர்: இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது

image

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட திருவையாறு பகுதியை சேர்ந்த ஆஷிக் மற்றும் செல்லையா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News November 26, 2025

தஞ்சை: உதவி கமிஷனர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

image

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், குப்பை தரம் பிரிப்பதில் 9.57 கோடி‌ ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தன. அதை தொடர்ந்து மாநகராட்சி முன்னாள் ஆணையரும்‌ – தற்போது தூத்துக்குடி உதவி கமிஷனருமான சரவணக்குமார், ஒய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் மணிசேகரன் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 26, 2025

தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!