News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<> mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

Similar News

News December 2, 2025

அரியலூர்: காணாமல் போன சிறுமிகள் ஒப்படைப்பு

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியை சேர்ந்த சிறுமிகள் இரண்டு பேர் வீட்டில் சண்டையிட்டு வெளியில் சென்றுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் தளவாய் காவல் நிலையத்தில், புகார் அளித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அரியலூர் எஸ்.பி விஷ்வேஸ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில், கடந்த 30ஆம் தேதி சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டு, சிறுமிகளை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

News December 2, 2025

அரியலூர்: முதன்மை நீதிபதி முக்கிய அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணை குழுவிற்கு, தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி 50 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் http://ariyalur.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சட்ட பணிகள் ஆபிசில் நேரடியாக டிசம்பர் 16ஆம் தேதிக்குள் வழங்கலாம் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர்வாலன்டினா தெரிவித்துள்ளார்.

News December 2, 2025

அரியலூர்: சந்தைக்கு சென்றவர் பலி

image

மீன் சுருட்டி வார சந்தைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்ப முயன்ற போது பெயிண்டர் வேலை செய்து வந்த சந்திரசேகர் என்பவர் சாலை விபத்தில் உயிரிழப்பு. மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வலது புறம் திரும்ப முயன்று உள்ளார். எதிர்பார விதமாக கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!