News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News October 23, 2025
தருமபுரியில் விலை கிடுகிடுவென உயர்வு

தருமபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நேற்று (அக்.22) ஒரு கிலோ தக்காளி பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (அக்.23) கிலோவிற்கு ₹8ரூபாய் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிலோ ₹26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் தக்காளி விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
News October 23, 2025
தர்மபுரியில் இன்றைய மழை பதிவு நிலவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (அக்.23) மழை பதிவு நிலவரம்; அரூர் 113 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 58 மில்லி மீட்டர், மொரப்பூர் 33 மில்லி மீட்டர், பென்னாகரம் 29 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி 24 மில்லி மீட்டர், தருமபுரி 23.1 மில்லி மீட்டர், நல்லம்பள்ளி 14 மில்லி மீட்டர், பாலக்கோடு 12 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 12 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
News October 23, 2025
தருமபுரி மாணவர்களுக்கு விடுமுறை

தருமபுரி அங்கன்வாடி பள்ளிகளுக்கு இன்று (அக்.23) மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். தொடர்ந்து பொலிந்து வரும் கனமழையால், மற்றும் மாணவர்களின் நலன் கருதி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும், பள்ளி நடந்து கொண்டிருக்கும் 1 மணிநேரத்திற்கு முன்பாகவே மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது .