News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் செய்யுங்கள்.

Similar News

News November 19, 2025

தருமபுரி: ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு!

image

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கற்பிக்கப்படுகிறது. இதில் சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்கு பொது சுகாதார திட்டம் என்ற பாடத்தை எடுக்க தகுதி வாய்ந்த மற்றும் அனுபவமிக்க அல்லது அனுபவம் மற்ற ஆசிரியர் தேவைப்படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு 8870075201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News November 19, 2025

தருமபுரி: கஞ்சா ஆசாமிகளை போலீசார் வலைவீசி பிடிப்பு!

image

தருமபுரி மாவட்டம், அரூர் சுடுகாடு அருகே நேற்று (நவ.19) போலீ சார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர், விசாரணையில் அவர் அரூரை சேர்ந்த தீப்பொறி (வயது 30) என்பதும், அவர் 500 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரூர் போலீசார் கைது செய்தனர்.

News November 19, 2025

தருமபுரியில் முத்தரப்பு கூட்டம் – ஆட்சியர் பங்கேற்பு!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று (நவ.19) மாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் கேழ்வரகு சாகுபடி செய்வது தொடர்பாக முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் தணிகாசலம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ரத்தினம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!