News April 28, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (28.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
Similar News
News October 17, 2025
சட்டமன்றத்திற்கு அல்வா கொண்டு வந்த உறுப்பினர்கள்

கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆளுங்கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த வந்தார். அந்த வகையில் இன்று மின்சார கட்டணம் குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வகையில் , திமுக உருட்டு கடை அல்வா, மாதாந்திர மின் கட்டணம் என்ற வசனங்களோடு அதிமுக MLA அல்வா கொண்டு வந்தனர்.
News October 17, 2025
சென்னை: இனி What’s App-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை What’s Appலயே பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)
News October 17, 2025
சென்னை: துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எஸ்டேட் போலீசாருக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டதில், மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் ஒரு வருடமாக போயஸ் கார்டனில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் தங்கி வருகிறார்.