News April 22, 2025
சென்னையைச் சேர்ந்த சிறுமி பலி

ஆலந்தூரை சேர்ந்த கார்த்திக் (31), மனைவி சுவேதா, மகள் நிஜிதா (10), உறவினர்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24) உடன் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது, வாலாஜா டோல்கேட் அருகே வேன் மற்றும் லாரிக்கு இடையே ஆட்டோ நசுங்கியது. இதில், சிறுமி நிஜிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
Similar News
News November 9, 2025
சென்னை மெரினாவில் இன்று கலைத்திருவிழா

சென்னை மெரினாவில் இன்று கலைவிழா நடைபெற உள்ளது. இதில் ஆதிமேளம், வில்லுப்பாட்டு, மல்லர் கம்பம், தென்னிந்திய நாட்டுப்புறக் கலைகள் என மெரினாவில், ஒரே மேடையில் நடைபெற உள்ளது. நாள்: 09.11.2025 (ஞாயிறு) நேரம்: மாலை 5:30 மணி
இடம்: நீலக் கொடி பகுதி, மெரினா கடற்கரை. பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து கலைத்திருவிழாவை ரசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்ஜோய் பண்ணுங்க.
News November 8, 2025
சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

சென்னை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் <
News November 8, 2025
6.42 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி முடிவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


