News April 22, 2025
சென்னையைச் சேர்ந்த சிறுமி பலி

ஆலந்தூரை சேர்ந்த கார்த்திக் (31), மனைவி சுவேதா, மகள் நிஜிதா (10), உறவினர்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24) உடன் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது, வாலாஜா டோல்கேட் அருகே வேன் மற்றும் லாரிக்கு இடையே ஆட்டோ நசுங்கியது. இதில், சிறுமி நிஜிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
Similar News
News April 22, 2025
கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை – தெற்கு ரயில்வே

சென்னையில் கடந்த 19ஆம் தேதி புறநகர் ஏசி ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் இன்று (ஏப்.22) இந்த ரயில் சேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில், அலுவலக நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்கவும், கட்டணத்தை குறைக்கவும் பயணிகள் வலியுறுத்தினர். இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம், ‘புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளது.
News April 22, 2025
சென்னையில் திகிலூட்டும் 6 இடங்கள்

▶️ டீமான்டி காலனி – ஆழ்வார்பேட்டை
▶️ உடைந்த பாலம் – பெசன்ட் நகர்
▶️ நிழல் வழிச்சாலை – பெசன்ட் நகர்
▶️ வால்மீகி நகர் – திருமான்மியூர்
▶️ விக்டோரியா விடுதி சாலை – சேப்பாக்கம்
▶️ ப்ளூ கிராஸ் ரோடு – பெசன்ட் நகர்
உங்களுக்கு திகில் நிறைந்த அனுபவம் பிடிக்கும் என்றால், இங்கெல்லாம் நீங்கள் அழைத்து செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்து திகில் அனுபவத்தை பெறுங்கள்.
News April 22, 2025
புறநகர் AC ரயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை

சென்னை புறநகர் ஏ.சி. மின்சார ரயில் சேவைக்கு ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறினாலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் அதற்கு மாற்றம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. பயணிகள் கருத்துக்களை 63747 13251 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பலாம். மேலும், முக்கிய நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.