News September 14, 2024
சென்னையில் 181 வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 181 ஆவது நாளாக இன்றும் (14/9/24) பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News December 12, 2025
சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் 13ம் தேதி கீழ்க்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, குன்றத்தூர்: திருநீர்மலை பிரதான சாலை, மகாநகர், டெம்பிள் வேவ் குன்றத்தூர், காவலர் குடியிருப்பு, சரண்யா நகர், ஏஆர். எடை மேடை, ஷர்மா நகர், மேத்தா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்’ என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
News December 12, 2025
சென்னை – ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் காலமானார்

சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்த ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர்நேற்று இரவு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியின்போது, 20 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளித்ததால் ஆயிரக்கணக்கான பறவைகள் அவரைத் தேடி வந்தன. இதனால் இந்திய அளவில் ‘Bird Man of Chennai’ என அழைக்கப்பட்டார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News December 12, 2025
சென்னையில் சீரியல் நடிகை தற்கொலை

சென்னை பிராட்வேவைச் சேர்ந்த சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39), குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரை அதிகளவு உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த அவர், கணவர் சதீஷுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


