News September 13, 2024
சென்னையில் 100% மின் விநியோகம் வழங்கப்பட்டது

சென்னை மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் நேற்றிரவு முழுவதும் சென்னையின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100% மின்சாரம் விநியோகம் தொடங்கப்பட்டதாகவும், மின்தடையால் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மின்தடை நீடிக்கிறதா?
Similar News
News November 23, 2025
சென்னையில் நாய் கைவிடுதல் அதிகரிப்பு

சென்னையில் கட்டாய நாய் மைக்ரோசிப்பிங் காலக்கெடு நெருங்குவதால், செல்லப்பிராணிகளை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி.சி.சி.யின் புதிய செல்லப்பிராணி உரிம விதிகள் மற்றும், ரூ.5,000 அபராதம் குறித்து மக்களிடம் உள்ள குழப்பம் இதற்கு காரணமாக உள்ளது. நவம்பர் 24 என அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி தற்போது டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?
News November 23, 2025
சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம்!

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, இத்திட்டத்திற்கான இறுதிக்கள அறிக்கையில் (DPR) சேர்க்கப்படவுள்ள வழித்தட வரைபடத்தை தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தப்படும். அடுத்த மாதத்தில் முடிவு தெரியவரும். மேலும், ஆய்வுப் பணிகளைத் தொடர தேவையான ஒப்புதல்களையும் கோரியுள்ளது.
News November 23, 2025
சென்னை: வாடகை கேட்ட HOUSE OWNERக்கு நேர்ந்த துயரம்

47 வயது பெண்ணின் கொருக்குப்பேட்டை வீட்டில் ராபர்ட் என்பவர் கடந்த பிப்ரவரி முதல் வாடகைக்கு குடியிருந்தார். ஆக மாதம் முதல் வாடகை பணம் சரியாக வழங்காமல் இருந்ததால், உரிமையாளர் கேட்டபோது, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் பெண்ணை தொடர்பு கொண்டு சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். புகாரின் பேரில் V-4 இராஜமங்கலம் போலீசார் ராபர்ட்டை நேற்று கைது செய்தனர்.


