News April 28, 2025
சென்னையில் ‘ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்’ அறிமுகம்

சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 200 ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்’ சாதனங்கள் நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்படுகின்றன. 24×7 கண்காணிப்பு, அவசர அழைப்பு வசதி, வீடியோ கால் மூலம் காவல் துறை உதவி போன்ற அம்சங்கள் உள்ள இந்த சாதனம், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
Similar News
News December 1, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் நேற்று (30.11.2025) இரவு 11.00 மணி முதல் இன்று (டிச.01) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News November 30, 2025
சென்னையில் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு!

அன்புமணி தான் பாமக தலைவர் எனத் தெரிவித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் வரும் டிச. 2-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் டிச 4-ம் தேதி டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
சென்னை: ‘காமுக’ முதியவருக்கு காப்பு

தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் அண்ணாநகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது முதியவர் ஒருவர் முத்தம் கொடுப்பது உட்பட பல்வேறு விதமாக சைகை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பெயரில் திருமங்கலம் போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசன் (64) என்பவரை, நேற்று கைது செய்தனர்.


