News April 28, 2025

சென்னையில் ‘ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்’ அறிமுகம்

image

சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 200 ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்’ சாதனங்கள் நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்படுகின்றன. 24×7 கண்காணிப்பு, அவசர அழைப்பு வசதி, வீடியோ கால் மூலம் காவல் துறை உதவி போன்ற அம்சங்கள் உள்ள இந்த சாதனம், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

Similar News

News December 9, 2025

சென்னை: உங்க நிலத்தை காணமா??

image

சென்னை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் <<>>பண்ணி LOGIN செய்து சென்னை மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE..

News December 9, 2025

சென்னை: இளைஞருக்கு தலையில் வெட்டு; தந்தை, மகன் கைது

image

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அஜய்(22). நேற்று முன்தினம் இரவு, அஜய் குடிபோதையில் இருக்கும் போது, மது வாங்கி தருவதாக கூறி, சாமுவேல் என்பவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது அஜய் – சாமுவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அஜயை அரிவாளால் வெட்டியுள்ளார். அவருடன் சேர்ந்து சாமுவேல் தந்தையும் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஜய் அளித்த புகாரின்பேரில் தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

News December 9, 2025

சென்னை: ஸ்கேன் எடுக்க சென்றவரிடம் பாலியல் அத்துமீறல்

image

சென்னை கொளத்தூரில் தனியார் ஸ்கேன்ஸ் லேபில் கில் கவின் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக கடந்த டிச.5ஆம் தேதி, ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று (டிச.8) கில் கவின் என்பவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!