News April 1, 2025
சென்னையில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல்

சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகம்.
Similar News
News November 22, 2025
சென்னை: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 22, 2025
சென்னை: சிறுவன் ஓட்டிய பைக்கால் எம்.பி-யின் ஓட்டுநர் பலி!

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் நேற்று (நவ.21) பிற்பகலில் தவறான திசையில் பைக் ஓட்டி வந்துள்ளார். இந்த இரு சக்கர வாகனம் மோதியதில், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சுரேஷ் (50) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த சுரேஷ் (50) ராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
News November 22, 2025
சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


