News April 15, 2025
சென்னையில் மீன் பிடிக்க தடை

சென்னையில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஏப்.14 நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. விசைப் படகுகளுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டாா் பொருத்தப்பட்ட செயற்கை இழுவை படகுகள், நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. மேலும், மீனவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.8,000 வழங்கப்படுகிறது.
Similar News
News November 20, 2025
சென்னை: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27க்குள் <
News November 20, 2025
சென்னையில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் மருத்துவ மாணவி ஒருவர் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அதே வரிசையில் நின்ற அரசு கார் ஓட்டுநரான விஜயகுமார் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து மயிலாப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.
News November 20, 2025
சென்னையில் ‘டீ’ குடிக்கச் சென்ற பெண்ணுக்கு கொடூரம்!

சென்னை மாதவரத்தில் 31 வயது டெலிவரி செய்யும் பெண் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அவரின் தோளைத் தொட்டு, மோசஸ் (எ) அப்பு (25) என்பவர் ஆபாசச் சைகை செய்ததோடு அவரை திட்டி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மோசஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ள அவர் BNS சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.


