News September 13, 2024

சென்னையில் மின்தடை குறித்து அமைச்சர் விளக்கம்

image

சென்னை மணலி துணைமின் நிலையத்தில் எதிர்பாராதா தீ விபத்தால் சென்னையின் சில பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை மின்சார வாரியத்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நள்ளிரவு 2 மணியளவில் மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் வழங்கப்பட்டது என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Similar News

News October 27, 2025

MONTHA: சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்க கடலில் உருவாகியுள்ள மோன்தா புயலால் சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் இருந்து 640 கி.மீ தொலைவில் உள்ள புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 27, 2025

சென்னையை பதம் பார்க்கும் ‘மோன்தா’

image

வங்கக்கடலில் மோன்தா புயல் நேற்று நள்ளிரவு உருவான நிலையில் இன்று (அக்.27) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. நாளை தீவிர புயலாக மாறும் மோன்தா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க.

News October 27, 2025

சென்னை: கபடி வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை!

image

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் ரமேஷ் ஆகியோர் பதக்கம் வென்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகையாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!