News January 23, 2025

சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில், வரும் குடியரசு தினத்தையொட்டி தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யவும், முன்னேற்பாடுகளுடன் கூடிய நடவடிக்கைகளை செயல்படுத்திடவும் வேப்பரியில் இன்று (ஜன.23) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாசவேலை எதிர்ப்பு சோதனை, வெடிபொருள் கண்டறிதல் உள்ளிட்டவை மோப்ப நாய் மூலம் உரிய கருவிகளுடன் தணிக்கை செய்து உரிய பாதுகாப்பை கண்காணித்திட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Similar News

News November 25, 2025

சென்னை: கணவனை கொன்று தூக்கில் மாட்டிய மனைவி

image

சென்னை கொடுங்கையூரில், கணவன் மணிகண்டனை நேற்று இரவு நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி சரண்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். கணவனை கொன்ற பிறகு தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும், விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் எதற்காக கணவனை கொன்றார் கள்ளத்தொடர்பு ஏதும் இவருக்கு இருக்கிறதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News November 25, 2025

தீபத் திருவிழாவுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் வருகையை கணித்து பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் டிசம்பர் 3, 4 தேதிகளில் 160 ஏசி பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!