News April 21, 2025
சென்னையில் நுங்கு விற்பனை அமோகம்

சென்னையில், நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சூட்டை தணிக்கும் நுங்கு, தர்பூசணி, இளநீர், பழக்கடைகளை பொதுமக்கள் நாடி செல்கின்றனர். போருர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 3 நுங்கு ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது.
Similar News
News November 20, 2025
சென்னை மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

சென்னை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
33. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 20, 2025
சென்னை: தாய்பால் குடித்த பச்சிளம் குழந்தை பலி

சென்னை வளசரவாக்கம் பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை தாய் பால் குடிக்கும் பொழுது திடிரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை குழந்தை பசி இன்மை காரணமாக அழுத நிலையில் அவரது தாய் குழந்தைக்கு பால் அளித்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமணைக்கு அழைத்து செல்லும் போதே குழந்தை உயிர் இழந்துள்ளது.
News November 20, 2025
புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை மன்றத்தில் இன்று (நவ.20), மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார். மேலும், திருப்பூர் துரைசாமி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தலைவர் மல்லை சத்தியா, மூத்த தலைவர்கள் நாஞ்சில் சம்பத், செங்குட்டுவன் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன், செல்லப்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


