News April 21, 2025
சென்னையில் நுங்கு விற்பனை அமோகம்

சென்னையில், நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சூட்டை தணிக்கும் நுங்கு, தர்பூசணி, இளநீர், பழக்கடைகளை பொதுமக்கள் நாடி செல்கின்றனர். போருர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 3 நுங்கு ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது.
Similar News
News November 24, 2025
கார்த்திகை தீபம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிச.02, 03 அன்று அதிநவீன சொகுசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து 160 குளிர்சாதன மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் 03 மற்றும் 04 டிசம்பர் 2025 அன்று இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் TNSTC official app மூலம் முன்பதிவு செய்யலாம்.
News November 24, 2025
சென்னையில் ரூ.50கோடி ஜிஎஸ்டி முறைகேடு

சென்னையில் ரூ.50 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டறியப்பட்டது என வடசென்னை ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 12 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு ஒருவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், 90 போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 196 சிம் கார்ட் கவர்கள் மற்றும் சிம் கார்டுகள், 42 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News November 24, 2025
JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.


