News August 14, 2024
சென்னையில் நாளை அமைச்சர்கள் பங்கேற்கும் சமத்துவ விருந்து

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள 31 கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ள சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மற்ற பிற கோயில்களில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
Similar News
News October 20, 2025
சென்னை: இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (19.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News October 19, 2025
சென்னை- பெங்களூர் விமானத்தில் கோளாறு

சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமான பொறியாளர்கள் இயந்திர கோளாறை சரி செய்த பிறகு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 109 பேர் உயிர் தப்பினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News October 19, 2025
BREAKING: சென்னையில் MLA மீது வழக்கு பதிவு

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர் பிரபாகரை தாக்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ எஸ்.ராஜகுமார் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கையால் தாக்குதல் என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு, பிரச்சினைக்குரிய காரை எம்எல்ஏ ஓட்டுனரிடம் ஒப்படைத்தனர்.