News August 14, 2024

சென்னையில் நாளை அமைச்சர்கள் பங்கேற்கும் சமத்துவ விருந்து

image

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள 31 கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ள சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மற்ற பிற கோயில்களில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

Similar News

News November 23, 2025

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம்!

image

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, இத்திட்டத்திற்கான இறுதிக்கள அறிக்கையில் (DPR) சேர்க்கப்படவுள்ள வழித்தட வரைபடத்தை தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தப்படும். அடுத்த மாதத்தில் முடிவு தெரியவரும். மேலும், ஆய்வுப் பணிகளைத் தொடர தேவையான ஒப்புதல்களையும் கோரியுள்ளது.

News November 23, 2025

சென்னை: வாடகை கேட்ட HOUSE OWNERக்கு நேர்ந்த துயரம்

image

47 வயது பெண்ணின் கொருக்குப்பேட்டை வீட்டில் ராபர்ட் என்பவர் கடந்த பிப்ரவரி முதல் வாடகைக்கு குடியிருந்தார். ஆக மாதம் முதல் வாடகை பணம் சரியாக வழங்காமல் இருந்ததால், உரிமையாளர் கேட்டபோது, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் பெண்ணை தொடர்பு கொண்டு சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். புகாரின் பேரில் V-4 இராஜமங்கலம் போலீசார் ராபர்ட்டை நேற்று கைது செய்தனர்.

News November 23, 2025

மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

image

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!