News August 9, 2024

சென்னையில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடக்கம்

image

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டமான ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை கோவை அரசு கல்லூரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை கிண்டியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ATM கார்டுகளை வழங்கினர்.

Similar News

News November 22, 2025

சென்னை: சிறுவன் ஓட்டிய பைக்கால் எம்.பி-யின் ஓட்டுநர் பலி!

image

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் நேற்று (நவ.21) பிற்பகலில் தவறான திசையில் பைக் ஓட்டி வந்துள்ளார். இந்த இரு சக்கர வாகனம் மோதியதில், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சுரேஷ் (50) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த சுரேஷ் (50) ராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

News November 22, 2025

சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

image

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 22, 2025

சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

image

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!