News January 23, 2025
சென்னையில் தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி

சென்னையில் அடுத்த மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மணலி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே அரசு மினி பஸ்கள் இயங்கி வரும் நிலையில், கூடுதல் சேவைக்காக முதல் முறையாக தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News November 5, 2025
சென்னை: 9 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!

சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் சிறுவனை துரத்தி சென்று கடித்ததில் சிறுவன் கை, கால் & முதுகில் காயம் ஏற்பட்டது. இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News November 4, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
சென்னை அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. *நண்பர்களுக்கு பகிரவும்*


