News January 24, 2025

சென்னையில் ட்ரோன் பறக்க தடை

image

குடியரசு நாளையொட்டி சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜன.25, 26) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரையிலும் அதேபோல் முதல்வர் இல்லம் முதல் மெரினா கடற்கரை வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 11, 2025

APPLY NOW: சென்னை ICF-இல் 1,010 காலி பணியிடங்கள்

image

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் 1,010 காலி பணியிடங்கள் உள்ளன. கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 11, 2025

சென்னை கல்லூரி மாணவன் குத்திக்கொலை

image

சென்னை SRM கல்லுாரியில் படித்து வந்த மோஷிக் (22), தனது நண்பர் ஷாஜனின் (23) பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 10 பேர் உடன் புதுச்சேரி ரெஸ்டோ பாருக்கு சென்றார். அங்கு, ஊழியர்கள், பவுன்சர்கள் உடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, பார் ஊழியர் அசோக்ராஜ், மோஷிக்கை கத்தியால் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். விசாரணையில், மோஷிக் குடிப்பழக்கம் இல்லாதவர் என்பதும் வீட்டிற்க்கு ஒரே மகன் என்பதும் தெரியவந்தது.

News August 11, 2025

சென்னையில் கொலை.. கோவையில் சடலம்!

image

நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் ஜெயராமன், பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூனில் பெருமாள், ஜெயராமனை கொலை செய்துள்ளார். போலீசில் சிக்காமல் இருக்கா ஜெயராமனின் உடலை காரில் சென்னையில் இருந்து கோவைக்கு எடுத்து பாலமுருகனின் உதவியோடு கிணற்றில் வீசினர். பின் இருவரும் போலீசில் சரணடைந்தனர். மேலும், இக்கொலைக்கு பலரும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!