News August 10, 2024
சென்னையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு 11 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். அதன்பின், வரும் 11ம் தேதி இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5.50க்கு தாம்பரம் வந்தடையும்.
Similar News
News November 28, 2025
டிட்வா புயல்: சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) சென்னைக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் சென்னையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
சென்னை: புறநகர் ரயிலில் சாகசம்.. ஒலித்த எச்சரிக்கை!

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சென்னை புறநகர் ரயிலில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, ரீல்ஸ் எடுப்பது, சாகசம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
புறநகர் ரயிலில் சாகசம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சென்னை புறநகர் ரயிலில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, ரீல்ஸ் எடுப்பது, சாகசம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.


