News April 5, 2025

சென்னையில் அரசு வேலை; 8th பாஸ் போதும்

image

பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார துறையில் 345 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8th பாஸ் போதும். B.Ed, B.Sc, Diploma, ITI, M.Ed, M.Sc, MBBS, Nursing, PG Diploma படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதிற்கேற்ப ரூ.18,500 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து ஏப்.11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <>லிங்கில் <<>>வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

News April 12, 2025

லாரி மோதி தொழிலாளி பலி

image

புழலை சேர்ந்தவர் மணி (54) லாரி ஓட்டுனர். இவரது லாரியில் மணியும் ரங்கன் (60) என்பவரும் மளிகைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புழல் வழியாக திருத்தணிக்கு சென்றனர். அப்போது மழை பெய்ததால் மளிகை பொருட்கள் நனையாமல் இருக்க ரங்கன் லாரியின் பின் பக்கத்தில் நின்று தார்ப்பாயை இழுத்து கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு லாரி ரங்கன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 12, 2025

கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி

image

ஆவடி மணலி, சாலமன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று மதியம், அவரது ஆட்டோவில் நண்பர்களான சுகுமார், சூர்யா, வேல்முருகன் ஆகியோருடன் ஆவடி கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். மாலை 4:55 மணியளவில் அங்கு அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது திடீரென கார்த்திக் மாயமானார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் கார்த்திக் உடலை மீட்டனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!