News August 9, 2024

சென்னைக்கு புதிய காவல் அதிகாரிகள் நியமனம் 1/2

image

24 காவல் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் துணை ஆணையராக குத்தாலிங்கம், தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராக கார்த்திகேயன், புளியந்தோப்பு துணை ஆணையராக முத்துக்குமார், மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பாளராக மணிகண்டன், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஜெயச்சந்திரன், சைபர் கிரைம் கண்காணிப்பாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News July 9, 2025

பெயிலானாலும் வேலை நிச்சயம்; TN அரசின் சூப்பர் திட்டம்

image

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை TN அரசு தொடங்கியுள்ளது. இதில் தங்கும் வசதி, உணவு&ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும், தகவலுக்கு (044-22500107, 044-25268320 ). SHARE IT. <<17003380>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள்

image

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்

News July 9, 2025

சென்னையில் சிலை அமைப்பை ஒழுங்குபடுத்த திட்டம்

image

சென்னை, சாலைகள், நடைபாதைகள் மறையும் வகையில் சிலைகள் அமைக்கப்படுவது தொடர்பாக வரும் புகார்களின் பின்னணியில், சென்னை நகரில் பொதுஇடங்களில் சிலை அமைப்பை ஒழுங்குபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2019ல் வருவாய் துறை வெளியிட்ட வழிகாட்டிகளை பின்பற்றி புதிய விதிமுறைகள் வரவிருக்கின்றன. அதிகாரிகள் இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.*சென்னை சாலைகளில் சிலை நிறுவப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?

error: Content is protected !!