News August 9, 2024
சென்னைக்கு புதிய காவல் அதிகாரிகள் நியமனம் 1/2

24 காவல் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் துணை ஆணையராக குத்தாலிங்கம், தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராக கார்த்திகேயன், புளியந்தோப்பு துணை ஆணையராக முத்துக்குமார், மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பாளராக மணிகண்டன், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஜெயச்சந்திரன், சைபர் கிரைம் கண்காணிப்பாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News October 14, 2025
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 14, 2025
சென்னையில் 3 லட்சம் பேருக்கு நோட்டிஸ்

சென்னை மாநகராட்சியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்துவரியை செலுத்தாத சுமார் 3 லட்சம் பேருக்கு மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரை அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.1.002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.122 கோடி அதிகம் இருப்பினும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அரையாண்டு சொத்து வரி செலுத்தாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
சென்னை: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<