News August 9, 2024
சென்னைக்கு புதிய காவல் அதிகாரிகள் நியமனம் 1/2

24 காவல் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் துணை ஆணையராக குத்தாலிங்கம், தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராக கார்த்திகேயன், புளியந்தோப்பு துணை ஆணையராக முத்துக்குமார், மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பாளராக மணிகண்டன், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஜெயச்சந்திரன், சைபர் கிரைம் கண்காணிப்பாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 15, 2025
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி!

பீகாரை சேர்ந்த மானவ்பஸ்வான் (48) எர்ணாகுளம் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது, திருவொற்றியூர்-வ.உ.சி.நகர் அருகே வந்த போது, ரயிலில் படிக்கட்டுகளில் இருந்தவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிருந்தவர்கள் ரயில் செயினை நிறுத்தியவுடன், ரயில்வே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News November 15, 2025
சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறல்!

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த பெண், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின்ராஜ் (25) என்பவருடன் மொபைல் செயலி மூலம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து மிரட்டி, லிபின்ராஜ் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவரின் புகைப்படத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்பேரில், போலீசார் லிபின்ராஜை கைது செய்தனர்.
News November 15, 2025
மனித உயிரை காத்த ‘சென்னை மெட்ரோ’

சென்னை, மெட்ரோ ரயில்களில் மாற்று அறுவை சிகிச்சைக்காக மனித உறுப்புகளை எடுத்துச் செல்ல திருத்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரலை, திருச்சி-சென்னை விமான நிலையத்துக்கு டாக்டர்கள் குழுவினர் கொண்டு வந்து, மெட்ரோ மூலம் 17.37 நிமிடங்களில் வடபழனி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சாலை வழியில் 1 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


