News August 9, 2024
செந்துறைக்குட்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு புதிய வாகனம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய வாகனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 25, 2025
அரியலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் 33 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
அரியலூர் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
அரியலூர்: கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு

அரியலூர் மாவட்டத்தில் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025-2026 ஆம் ஆண்டில் தேசிய கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் https://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


