News August 9, 2024

செந்துறைக்குட்பட்ட  ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு புதிய வாகனம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய வாகனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 30, 2025

அரியலூர்: இன்றே கடைசி நாள் – ஆட்சியர் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திடத்தின் கீழ், நடப்பாண்டு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடந்த நவ.15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதற்கான காலக்கெடு இன்று நவ.30 வரை நீடிக்கப்பட்டது. எனவே கடைசி நாளான இன்று பயிர் காப்பீடு பெற விவசாயிகள் வங்கிகள் அல்லது இ-சேவை மையத்தில் ரூ.577.50 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 30, 2025

அரியலூர்: பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

image

அரியலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லோகம்பாள்(65). இவர் நேற்று முந்தினம் சென்னிவம் ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 இரண்டு பேர் அவரை கீழே தள்ளிவிட்டு தங்க சங்கிலையை பறித்தனர். பின் அவர் கூச்சலிட அக்கம் பக்கத்தை வருவது பார்த்த திருடர்கள், அவரிடம் இருந்து கிடைத்த நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 30, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.29) இரவு 10 மணி முதல் இன்று (நவ.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!