News November 23, 2024

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

image

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமான பணப்பரிமாற்ற வழக்கு நவ.29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்தி முன்னிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை தரப்பில் தடவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குனர் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News November 23, 2025

காரமடை அருகே விபத்து: ஒருவர் பலி

image

காரமடையை அடுத்த பிரஸ்காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது காரில் நண்பர் நிஷாந்த் என்பவருடன் நேற்றிரவு கட்டாஞ்சி மலை வழியாக தோலம்பாளையம் சென்றுள்ளார். தோலம்பாளையம் புதூர் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மோதியதில் கோவிந்தராஜ் பலியானார். நிஷாந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 23, 2025

காந்திபுரத்தில் பாலியல் தொழில்! சிக்கிய 3 பேர்

image

கோவை, காந்திபுரம் ராம்நகரில் தனியார் விடுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்தது. காட்டூர் போலீசார் ரகசிய தகவலின் பேரில் நேற்று சோதனை நடத்தி, நேபாளைச் சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.

News November 23, 2025

கோவையில் கவனத்தை ஈர்த்த படைப்புகள்

image

கோவை விழாவின் பகுதியாக அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் Art Street நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓவியர்கள் 9ம) கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். கல்லில் வரையப்பட்ட ஓவியங்கள், களிமண் மற்றும் மினியேச்சர் கலைப்பாடல்கள், குழந்தைகளின் செயற்பாடுகள் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

error: Content is protected !!