News November 23, 2024

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

image

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமான பணப்பரிமாற்ற வழக்கு நவ.29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்தி முன்னிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை தரப்பில் தடவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குனர் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News December 2, 2025

கோவைக்கு விடுமுறை: எழுந்த கோரிக்கை!

image

கோவையில் நாளை கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருநாளன்று விடுமுறை அறிவித்திருப்பது போல் கோவையிலும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பாக மாநில பொறுப்பாளர் சூர்யா தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிசம்பர்.1) மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 2, 2025

கருமத்தம்பட்டி அருகே 16 பேர் அதிரடி கைது!

image

கருமத்தம்பட்டி அருகே கொள்ளுப்பாளையம் பகுதியில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்கமாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு தென்னந்தோப்பு பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, 2 சேவல்கள், ரொக்கப் பணம் ரூ.9700, 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News December 2, 2025

பைக் ரேசிங்கில் சாதித்த மாணவிக்கு எம்எல்ஏ பாராட்டு

image

தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இளையோர் பைக் ரேசிங் போட்டியின் மாவட்ட அளவில் தகுதிச் சுற்றில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சனா ஶ்ரீ 2-ஆம் இடம் பெற்று சிறப்புடன் தேர்வாகியுள்ளார். இதன் காரணமாக, அச்சிறுமியை இன்று (டிச.1) கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து, அச்சிறுமியின் சாதனையை பாராட்டி, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

error: Content is protected !!