News April 10, 2025
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்

செட்டிக்குளம் ஏகாம்பரஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு பங்குனி 19,20,21 தேதிகளில் சூரிய கதிர்கள் நேரடியாக ஏகாம்பரேஸ்வரர் மீது விழும். உட்பிராகத்தில் 10 தூண்கள் உள்ளன அதனை சந்தன குச்சியால் தட்டினால் 10 வகையான ஒலிகள் எழும். இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்கினால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.
Similar News
News December 7, 2025
பெரம்பலூர்: 4வைத்து நாளாக தொடர்ந்த போராட்டம்

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை நிறுத்த வேண்டியும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறையை தொடர்ந்து அனுமதிக்க வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் கடந்த 3-ந்தேதி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் 4-வது நாளாக நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். இதனால் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
News December 7, 2025
பெரம்பலூர் பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 7, 2025
பெரம்பலூர்: காவல்துறை சார்பில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 13 இரு சக்கர வாகனம், 1 மூன்று சக்கர வாகனம், இரண்டு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 16 வாகனங்கள். வரும் (12.12.2025) அன்று மாவட்ட ஆயுத படை வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. வாகனம் வாங்குவோர் வருகின்ற 10,11 ஆகிய தேதிகளில் அமலாக்கபிரிவு அலுவலகத்தில் ₹500 செலுத்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


