News April 10, 2025
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்

செட்டிக்குளம் ஏகாம்பரஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு பங்குனி 19,20,21 தேதிகளில் சூரிய கதிர்கள் நேரடியாக ஏகாம்பரேஸ்வரர் மீது விழும். உட்பிராகத்தில் 10 தூண்கள் உள்ளன அதனை சந்தன குச்சியால் தட்டினால் 10 வகையான ஒலிகள் எழும். இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்கினால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.
Similar News
News December 6, 2025
பெரம்பலூரில் உள்ள சோழர் கால பொக்கிஷம்!

பெரம்பலூர் வாலிகண்டபுறத்தில் வாலீஸ்வரர் கோயில் உள்ளது, இது சுமார் 2000 ஆண்டுகால வரலாறு கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோவிலின் கருவறை மற்றும் சன்னதிகள் ராஜகோபுரத்தை விடத் தாழ்வாக அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும், மேலும் இது ஒரு அதிசயமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோயிலாகப் போற்றப்படுகிறது,. இது சோழர் கால கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
பெரம்பலூர்: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 6, 2025
பெரம்பலூர்: மகளிர் தொழில் தொடங்க கடன்

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார், சாதி சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை தொடர்புகொள்ள ஆட்சியர் மிருணாளினி அறிவிதத்துள்ளார்.


