News October 25, 2024
செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செஞ்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் குவிந்தனர். அதேபோல், கிராமப் பகுதியில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த வாரவச் சந்தையில் சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. 1 ஆடு ரூ.5,000 – ரூ.35,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News December 23, 2025
விழுப்புரம்: 10 நாட்களாக மது குடித்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

விழுப்புரம்: நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (40), கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் எந்த அசைவும் இன்றி இருந்துள்ளார். அதைக்கண்ட உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 23, 2025
விழுப்புரம்: OTP கூறி ரூ.5,04,514 பறிகொடுத்த ஆசிரியை!

விழுப்புரம்: ஆரோவிலில் வசித்து வரும் டி.சேத்னா டோரா(53), ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது விவரங்களை பெற்றுள்ளார். டோராவும் OTP உட்பட அனைத்து விவரங்களையும் கூறிய நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,04,514 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 23, 2025
விழுப்புரம்: OTP கூறி ரூ.5,04,514 பறிகொடுத்த ஆசிரியை!

விழுப்புரம்: ஆரோவிலில் வசித்து வரும் டி.சேத்னா டோரா(53), ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது விவரங்களை பெற்றுள்ளார். டோராவும் OTP உட்பட அனைத்து விவரங்களையும் கூறிய நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,04,514 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


