News September 13, 2024
செஞ்சிலுவை சங்க கூட்டம் தள்ளிவைப்பு

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் 16ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என இருந்த நிலையில் தற்போது 17ஆம் தேதி மிலாடி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் செஞ்சிலுவை சங்கத்தின் கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
நீலகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

நீலகிரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
நீலகிரி: பெண் போலீசுக்கு ஆபாச வீடியோ.. ஒருவர் கைது!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவர் நீலகிரி எஸ்பி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனை எண்ணை குறித்துக்கொண்டு முருகன், வாட்ஸ்-அப்புக்கு ஆபாச புகைப்படம், வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இன்ஸ்பெக்டர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊட்டி ஊரக போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
News November 22, 2025
நீலகிரி: இன்று ஒருநாள் தடை அறிவிப்பு!

நீலகிரி, குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து ஜிம்கானா வரையிலான ஆரஞ்ச் குரோவ் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 நாட்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அரசு டவுன் பஸ்கள், ராணுவ வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், 22-ம் தேதி (இன்று) ஒரு நாள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.


