News April 20, 2025
செங்கையில் 10 அவதாரங்களில் காட்சியளிக்கும் பெருமாள்

பெருமாளின் 10 அவதாரங்களை ஒருங்கிணைத்து ஒரே சிலையாக செங்கல்பட்டு திருவடி சூலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள் இங்கு மச்சம், கூர்மம், வராகம், பரசுராமர், ஸ்ரீ ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என அனைத்து அவதாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று முகங்கள், 20 கரங்களுடன் பிரம்மாண்டமாக சிலை காணப்படுகிறது. மூலவராக, திருப்பதியில் உள்ளது போன்று, வெங்கடேச பெருமாளாக எழுந்தருளியுள்ளார். ஷேர்
Similar News
News December 16, 2025
செங்கல்பட்டு: ஆசிரியர் வீட்டில் 14 சவரன் நகை திருட்டு!

செங்கல்பட்டு பள்ளிக்குட தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் . இவர் சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். நேற்று இரவு இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
செங்கல்பட்டு: பைக்கில் சென்ற நபர்களுக்கு எமனாக ஆனா மாடுகள்

திருப்போரூர் அடுத்த வேலங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிறுதாவூர் சாலையில் படுத்திருந்த மாடுகள் திடீரென எழுந்து ஓடியதால், எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News December 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


