News September 14, 2024
செங்கையில் குரூப்-2, 2ஏ முதல் நிலைத் தேர்வெழுதும் 21640 பேர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 மையங்களில் 21,640 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
Similar News
News November 15, 2025
செங்கை: பிளாஸ்டிக் பையில் சடலமாக இருந்த 5 மாத சிசு!

செங்கல்பட்டு, கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு சிக்னல் அருகே பாழடைந்த கட்டடம் உள்ளது. இதனருகே உள்ள காலி இடத்தில், பிளாஸ்டிக் பையில் 5 மாத ஆண் குழந்தை உடல் வீசப்பட்டிருந்தது. இதனை கண்ட தூய்மைப் பணியாளர்கள், மேடவாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேடவாக்கம் போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
News November 15, 2025
செங்கல்பட்டில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் கோட்டத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், கிளியாநகர், மின்னல்சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைப்புத்தூர், பெரும்பேர்கண்டிகை, சின்னகயப்பாக்கம், ராமாபுரம், காட்டுக்கரணை, பொற்பனங்கரனை, வேலாமூர், மதூர் & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்
News November 15, 2025
செங்கல்பட்டு இரவு பணி காவலர்கள் விபரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்..


