News April 17, 2025
செங்குளவிகள் கொட்டி பெண் பலி

மதுராந்தகம் குருகுலம் பகுதியைச் சேர்ந்த மனோகரன்(55), இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது வீட்டின் அருகே உள்ள மரத்தில் குளவி கூடு கட்டி இருந்தது. நேற்று, திடீரென்று கூட்டை விட்டு பறந்த செங்குளவிகள் மனோகரன், லட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மூவரை கொட்டி உள்ளது. மயங்கி விழுந்த இவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், லட்சுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 13, 2025
செங்கல்பட்டு: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyami<
News December 13, 2025
செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

செங்கல்பட்டு மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
செங்கல்பட்டு: கண்டோன்மெண்ட் ஊழியரை தாக்கிய 3 பேர்

பல்லாவரம்-பரங்கிமலை கண்டோன்மென்ட் பகுதி, திரிசூலத்தில், ஜெயகுமாரி என்பவர் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்திருந்தார். நிர்வாகத்தின் நோட்டீஸுக்கு பிறகும் இணைப்பு துண்டிக்கப்படாததால், ஊழியர்கள் அதைத் துண்டிக்கச் சென்றனர். அப்போது, ஜெயகுமாரியின் மகன்களான ஜெயபால், பார்த்திபன் & ஜெயக்குமார் ஆகியோர் கண்டோன்மென்ட் ஊழியர்களை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதனால் 3மகன்களையும் கைது செய்தனர்.


