News April 17, 2025

செங்குளவிகள் கொட்டி பெண் பலி 

image

மதுராந்தகம் குருகுலம் பகுதியைச் சேர்ந்த மனோகரன்(55), இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது வீட்டின் அருகே உள்ள மரத்தில் குளவி கூடு கட்டி இருந்தது. நேற்று, திடீரென்று கூட்டை விட்டு பறந்த செங்குளவிகள் மனோகரன், லட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மூவரை கொட்டி உள்ளது. மயங்கி விழுந்த இவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், லட்சுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News December 3, 2025

செங்கல்பட்டு: தீக்குளித்த சிறுவன் உயிரிழப்பு!

image

கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் நித்திஷ் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை இரவு கல்பாக்கம் அணுவாற்றல் குடியிருப்பு மைதானத்தில், நித்திஷ் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நித்திஷ் நேற்று உயிரிழந்தார்.

News December 3, 2025

செங்கல்பட்டிற்கு விடுமுறை அறிவிப்பு!

image

‘டிட்வா’ புயல் காரணமாக இன்று (டிச.3) செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை இன்று (டிச.3) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!

News December 3, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (டிச.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!