News May 10, 2024

செங்குணம் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி 

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 14, 2025

பெரம்பலூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!

News October 14, 2025

பெரம்பலூர்: தூய்மை பணியாளர்கள் திடீர் மயக்கம்!

image

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள் 11பேர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களின் உறவினர்கள் பலரும் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

News October 14, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரி, ஸ்வீட் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் FSSAI. பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனவும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இனிப்பு, கார வகைகளைத் தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!