News May 10, 2024

செங்குணம் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி 

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 13, 2025

பெரம்பலூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு…

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த உங்களது புகார் மற்றும் குறைகளை 0435- 2403724-26 என்ற கும்பகோணம் போக்குவரத்து கழக எண்ணில் தெரிவிக்கலாம். பேருந்து காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் அநாகரீமாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து நீங்கள் புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

பெரம்பலூர் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு பிரச்சாரம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(நவ.12) மாலை 6.30 மணியளவில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்டக்குழு உறுப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் இளவரசன் மற்றும் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் உட்பட சங்க உறுப்பினர்கள் வருகின்ற (நவ-18) அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதாரவு தர வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

News November 13, 2025

பெரம்பலூர்: மீன் வளர்க்க மானியம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் சார்பாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள், புதிய நன்னீர் மீன் வளர்ப்பு பயோ பிளாக் தொட்டிகள், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்களில் பொதுப்பிரிவிற்கு 40 மற்றும் மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுடையோர் மீனவர் நலத்துறையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!