News April 14, 2024
செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்

பெரியநாயக்கன்பாளையத்தில் (ஏப்ரல். 14) இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என பிரச்சாரம் செய்தார். இதில், திரைப்பட நடிகர் சரத்குமார், எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 25, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (25.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
BREAKING கோவைக்கு புதிய திட்டங்கள் அறிவிப்பு!

கோவையில் நடைபெறும் டிஎன் ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, சூலூரில் 200 ஏக்கர் பரப்பளவில் வான்வழி (ம) பாதுகாப்பு தொழில் பூங்கா அமைக்கப்படுவதாக கூறினார். மேலும் சூலூர், கரவழி மாதப்பூர், ராசிபாளையம் ஆகிய பகுதிகளில் பண்முக போக்குவரத்து பூங்கா, சூலூர் மற்றும் பல்லடத்தில் செமிக்கண்டக்டர் பூங்கா ஆகியவை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News November 25, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி, கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, கைக்கோளாம்பாளையம், வெங்கிட்டாபுரம், சோமயம்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், காணுவாய், தடாகம் சாலை, குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


