News April 18, 2025

செங்கல்பட்டு மாவட்ட சில செய்திகள்

image

➡தாம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க பெண்களுக்கு ஓய்வு அறை அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. ➡ செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ➡மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு.

Similar News

News September 13, 2025

செங்கல்பட்டு: 1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ APPLY செய்ய கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிக் செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 13, 2025

செங்கல்பட்டு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (ம) உதவியாளர் பணிகளுக்கு நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட உள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட பதவிகளுக்கு எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 15-ந்தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 044- 2742 6020 என்ற எண்ணை அழைக்கலாம்.

News September 13, 2025

குரோம்பேட்டை அருகே விபத்து

image

திருநீர்மலையை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவர் குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்து மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவரை (41) கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!