News April 7, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய TOP 5 செய்திகள்: 1) பொழிச்சலூரில் தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை. 2) 23 கிராமங்களை உள்ளடக்கி மாமல்லபுரம் புது நகரத்தை உருவாக்க உத்தேசம். 3) சட்ட பேரவையில் மதுராந்தகம் MLA சஸ்பெண்ட். 4) மக்கள் குறைதீர் கூட்டத்தில் 537 மனுக்கள் பெறப்பட்டது. 5) சரிவர பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்- டி.ஆர். பாலு எச்சரிக்கை. நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
Similar News
News November 19, 2025
செங்கல்பட்டு: ரயில் முன் பாய்ந்த அரசு ஊழியர்

தாம்பரம் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருபவர் யுவராஜ். இவர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவச் சான்றிதழ் அனுப்பி மருத்துவ விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு யுவராஜின் மேலதிகாரி, A.E. கோவிந்தராஜ் விடுமுறையை நிராகரித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த யுவராஜ் நேற்று காலை மறைமலை நகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
செங்கல்பட்டு காவல் துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு காவல் துறை இன்று (நவம்பர் 18) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது லிங்க்களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு செங்கல்பட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உண்மையான அபராத ரசீது லிங்க்கள் .gov.in முடிவடையும் அரசின் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


