News March 25, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுங்க கட்டணம் உயர்வு

image

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 6, 2025

செங்கல்பட்டு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News December 6, 2025

செங்கல்பட்டின் பெயர்க்காரணம் தெரியுமா?

image

சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்ததால் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது தற்போது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது இப்பகுதி மக்களால் செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

செங்கல்பட்டு பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

image

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!