News March 25, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுங்க கட்டணம் உயர்வு

image

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 7, 2025

செங்கல்பட்டு: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

செங்கை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

செங்கல்பட்டு: கார் மோதி விபத்து!

image

செங்கல்பட்டு, மாமண்டூர் பகுதியில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று காரினை இளைஞர் ஒருவர் ஓட்டி சென்றார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள சுவற்றில் மோதியது. இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

error: Content is protected !!