News April 4, 2024

செங்கல்பட்டு: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட லோக்சபா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் உள்ளது. இங்கு 24 மணிநேரமும் தேர்தல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News

News April 20, 2025

செங்கையில் 10 அவதாரங்களில் காட்சியளிக்கும் பெருமாள்

image

பெருமாளின் 10 அவதாரங்களை ஒருங்கிணைத்து ஒரே சிலையாக செங்கல்பட்டு திருவடி சூலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள் இங்கு மச்சம், கூர்மம், வராகம், பரசுராமர், ஸ்ரீ ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என அனைத்து அவதாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று முகங்கள், 20 கரங்களுடன் பிரம்மாண்டமாக சிலை காணப்படுகிறது. மூலவராக, திருப்பதியில் உள்ளது போன்று, வெங்கடேச பெருமாளாக எழுந்தருளியுள்ளார். ஷேர்

News April 20, 2025

செங்கல்பட்டு இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

இன்று (மார்ச்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

News April 19, 2025

சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

image

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். “ஷேர்யார்” என்ற சிங்கத்தையும் “யுகா” என்ற புலியையும் அவர் தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு செயல்பாடுகளுக்கு அவரது பங்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!