News March 29, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவரது நண்பர் கவுசிக் இவர்கள் இருவரும் சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் இருவரும் டூவீலரில் கல்லூரிக்கு சென்றனர். பல்லாவரம் மேம்பாலம் அருகே சாலையில் எதிர் திசையில் பயணித்தனர். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கவுசிக் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News August 11, 2025

செங்கல்பட்டில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை (ஆகஸ்ட் 12) செங்கல்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்!

News August 11, 2025

ஏசி மின்சார பேருந்து சேவை தொடக்கம்

image

சென்னையை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏசி மின்சார பேருந்து சேவை செங்கல்பட்டில் தொடங்கப்பட உள்ளது. ரூ. 233 கோடி மதிப்பீட்டில் 55 ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இந்த சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

News August 11, 2025

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் விரைவில் ஆய்வுகளைத் தொடங்கி, மழை பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

error: Content is protected !!