News August 25, 2024
செங்கல்பட்டில் போக்குவரத்து மாற்றம்

செயின்ட் தாமஸ் மவுன்ட் – பூந்தமல்லி சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்றும், நாளையும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. போரூரில் இருந்து மவுன்ட் சாலை வழியாக கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் ராணுவ சாலை சந்திப்பில் இருந்து இடது புறமாக திரும்பி புஹாரி ஹோட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை சாலையில் செல்ல வேண்டும்.
Similar News
News November 16, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு (நவம்பர்-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
செங்கல்பட்டு: கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நவ-17 அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாளும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் எனவே பொதுமக்கள் குறிப்பாக கடலூர் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
News November 15, 2025
செங்கல்பட்டு: ரயில்வேயில் 3058 காலியிடங்கள் அறிவிப்பு!

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் இங்கே <


