News June 28, 2024
செங்கல்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.30 லட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிய அவர், செங்கல்பட்டில் 13,000 டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
செங்கல்பட்டு இரவு பணி காவலர்கள் விபரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
செங்கல்பட்டில் ஒரு ரூபாய் டிக்கெட்!

சென்னை ஒன் செயலி மூலம், ரூ.1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ரூ.1. ஒரு பயனருக்கு ஒரு முறை என இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். *இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க*
News November 13, 2025
பயிர் கடனுதவி வழங்க ரூ.560 கோடி ஒதுக்கீடு

செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம்,செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள, 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, அக். நவ., மாதங்களில் கடன் உதவி வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


