News May 7, 2025
செங்கல்பட்டில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி

மறைமலைநகர், கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் செக்யூரிட்டி சுப்பிரமணி, 70. நேற்று இரவு, கீழக்கரணை பேருந்து நிறுத்ததில், ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது பைக் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 12, 2025
செங்கல்பட்டு பகுதியில் மின்தடை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை பிரதான சாலை, மஹாநகர், டெம்பிள் வேவ் குன்றத்தூர், காவலர் குடியிருப்பு, சரண்யாநகர், ஏஆர்.எடைமேடை, ஷர்மாநகர், மேத்தாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். மின்வாரிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மின்வினியோகம் கொடுக்கப்படும்.
News December 12, 2025
செங்கல்பட்டு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி செயல்களுக்கான காலி பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இன்று ( டிசம்பர்-12) நடைபெறவிருந்த ஊராட்சி செயலாளர் பதவிற்கான நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் நேர்காணலுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 52 ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
News December 12, 2025
செங்கல்பட்டு: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <


