News May 7, 2025

செங்கல்பட்டில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி

image

மறைமலைநகர், கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் செக்யூரிட்டி சுப்பிரமணி, 70. நேற்று இரவு, கீழக்கரணை பேருந்து நிறுத்ததில், ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது பைக் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 10, 2025

செங்கல்பட்டு: இனி இவர்களும் பான்-கார்டு APPLY பண்ணலாம்

image

பான் கார்டு பெற 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பதில்லை. சிறார்களும் பான் கார்டு வாங்கலாம். குழந்தைகளுக்கு வெளிநாடு செல்ல அல்லது பள்ளிகளில் கிடைக்கும் பலன்களை பெற பான் கார்டு தேவைபடுகிறது. இதற்கு இந்த <>லிங்க் <<>>உள்ள சிறாருக்கான விண்ணப்பப் பிரிவில், குழந்தையின் ஆவணங்கள் மற்றும் பெற்றோரின் கையொப்பம், புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டும். சுமார் 15 நாட்களில் பான் கார்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

News December 10, 2025

செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

செங்கல்பட்டு மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK <<>>HERE.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 10, 2025

செங்கல்பட்டு: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!