News May 7, 2025

செங்கல்பட்டில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி

image

மறைமலைநகர், கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் செக்யூரிட்டி சுப்பிரமணி, 70. நேற்று இரவு, கீழக்கரணை பேருந்து நிறுத்ததில், ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது பைக் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 8, 2025

செங்கல்பட்டு வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

செங்கல்பட்டு வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE

News December 8, 2025

FLASH: செங்கல்பட்டு- இருவருக்கு அரிவாள் வெட்டு!

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் நேற்று செய்யூரை சேர்ந்த தினேஷ், செம்பியத்தை சேர்ந்த அப்துல் ரஹிம் ஆகியோர் டாஸ்மாக் அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது பெண்களுடன் வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர்.மேலும் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News December 8, 2025

செங்கல்பட்டு: ரயிலில் பொருட்களை தொலைத்து விட்டீர்களா…?

image

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <>Rail Madad<<>> மொபைல் செயலியில் PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

error: Content is protected !!