News March 24, 2025

செங்கல்பட்டில் குடிகொண்ட மூதேவி

image

வல்லம் மலை குகைக் கோயில் என்பது மலைகளில் அமைந்துள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்ட கோயிலாகும். இது ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டியதாகும். இங்கே ஒரு பெரிய மூதேவியின் சிலை உள்ளது. இம்மூதேவியைத்தான் பல்லவ மன்னர்களும் தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடி வந்துள்ளனர். அவர்களைப் பிற்காலத்தில் வென்றுப் பேரரசை நிறுவிய இடைக்காலச் சோழர்களும்கூட இம்மூதேவிக்குச் சிறப்பான வழிபாடுகள் செய்துள்ளனர்.ஷேர்

Similar News

News December 7, 2025

செங்கல்பட்டு மக்களே இந்த WEEKEND பிளான் ரெடி

image

செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தட்சிணசித்ரா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 18 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தென் மாநிலத்தின் கலை பொருட்களை காணலாம். நுழைவு கட்டணம் ரூ.20- 110 மட்டுமே. விசிட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 7, 2025

செங்கல்பட்டு: முதியவரிடம் கோடி கணக்கில் மோசடி 3 பேர் கைது

image

தாம்பரத்தைச் சேர்ந்த 62 வயது சந்திரன் என்பவரிடம், ‘வங்கி கணக்கு மோசடி, டெல்லி போலீஸ் வழக்கு, டிஜிட்டல் கைது’ எனக் கூறி மிரட்டி ரூ.2.25 கோடியை மர்ம நபர்கள் மோசடி செய்தனர். இது தொடர்பாக, ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மேலும் 3 பேர் (அக்‌ஷய் சுந்தர் ராவ், நஜ்ருல் அலி, மொபரோக் ஹூசைன்) கைது செய்யப்பட்டனர். சந்திரனிடம் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.

News December 7, 2025

செங்கல்பட்டு: இன்றைய ரோந்துக் காவல் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!