News August 8, 2024

செங்கல்பட்டில் காவல் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் துணை ஆணையராக பணியாற்றிய சுபலட்சுமி, சென்னை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவலர் பயிற்சி மைய எஸ்.பி செல்வநாகரத்தினம் திருவல்லிகேணி காவல் துணை ஆணையராகவும். தாம்பரம் காவல் ஆணையர் கவுதம் கொயல், சேலம் மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News October 26, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (அக்டோபர்-25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

செங்கல்பட்டு: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News October 25, 2025

செங்கல்பட்டு காவல்துறையினரின் சைபர் க்ரைம் விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சைபர் க்ரைம் விழிப்புணர்வு
சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் மிரட்டலுக்கு அஞ்சாமல் புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கி மேலாளர், மின்சாரக் கட்டணம், பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்குதல்/விற்றல் போன்ற பெயர்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!