News August 16, 2024
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா ஆப்பரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் என சுற்றுலா விருதுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
கள்ளக்குறிச்சி: தங்க மோதிரத்தை தொலைத்த மாணவி விபரீத முடிவு!

மேல்வாழப்பாடியை சேர்ந்த சக்திவேல், செல்வியின் மகள் கௌரி (17), சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த கௌரியிடம், கையில் இருந்த தங்க மோதிரத்தை எங்கே என கேட்டு அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்தை குடித்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 5, 2025
கள்ளக்குறிச்சியில் மழையால் 24 வீடுகள் இடிந்து விழுந்தன!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக கொங்கராயபாளையம், பெருவெங்கூரை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, குலதீபமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 24க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. அது தவிர, பசு மாடுகளும், 3 கன்றுகளும் உயிரிழந்துள்ளன. இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் இரவு ரோந்து பணி விபரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காவல் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரவு ரோந்து அதிகாரியாக காவல்துணை கண்காணிப்பாளர் தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் ஏதேனும் அவசரம் என்றால் இந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என தெரிவிப்பு.


