News August 8, 2024
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா விருதுகளை பெறுவதற்கு வரும் 20ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 7397775682 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஷேர் செய்யவும்.
Similar News
News November 13, 2025
கந்தர்வகோட்டை அருகே சூதாட்டிய 4 பேர் கைது

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சம்பேட்டை குளக்கரை அருகே நேற்று உதயகுமார் (37), ராஜா (49), கருப்பசாமி (44), பாலகிருஷ்ணன் (47) ஆகிய நான்கு பேரும் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News November 13, 2025
புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<
News November 13, 2025
புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை நார்த்தாமலை அடுத்த பூங்குடியில் முருகேசன் என்பவர் மகன் ஹரிணேஸ்வரன் (11) பூங்குடியில் உள்ள குளத்தில் (நவ.8) அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரில் வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


