News January 24, 2025
சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்

சுருளி அருவியில் குளிக்க தினமும் 100க்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது யானைகள் கூட்டம் அடிக்கடி வந்து செல்கிறது. வெண்ணியாறு பகுதியில் யானைகள் முகாமிடுவது வாடிக்கையாகும்.அப்போது அருவி பகுதியை ஒட்டி யானைகள் திடீர் திடீரென வந்து செல்வதால் அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வனத்துறை அதிகாரிகள் குழுப்பத்தில் உள்ளனர்.
Similar News
News January 1, 2026
தேனி: சட்டக் கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கபிலன் (20). இவர் தேனி அரசு சட்டக்கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடன் படிக்கும் வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தகுமார் அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சரண், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கபிலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (டிச.31) பதிவு.
News January 1, 2026
தேனி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தேனி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும் புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News January 1, 2026
தேனியில் அதிர்ச்சி….. 339 பேர் பலி

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 28 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள், 3 பெண்கள் வன்கொடுமை வழக்குகள், 35 போக்சோ வழக்கு என 81 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. புகையிலை, போதைப்பொருட்கள் தொடர்பாக 2467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓராண்டில் 1239 வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 339 பேர் இறந்துள்ளனர்.


