News January 24, 2025
சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்

சுருளி அருவியில் குளிக்க தினமும் 100க்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது யானைகள் கூட்டம் அடிக்கடி வந்து செல்கிறது. வெண்ணியாறு பகுதியில் யானைகள் முகாமிடுவது வாடிக்கையாகும்.அப்போது அருவி பகுதியை ஒட்டி யானைகள் திடீர் திடீரென வந்து செல்வதால் அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வனத்துறை அதிகாரிகள் குழுப்பத்தில் உள்ளனர்.
Similar News
News September 18, 2025
தேனி மக்களே 8th படித்தால் கூட வேலை

தேனி வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 19.09.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். வேலை தரும் நிறுவனங்களை<
News September 18, 2025
தேனியில் எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

பூதிப்புரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார் 42. திருமணம் ஆகவில்லை. இவர் பூபால சமுத்திரக் கண்மாய் அருகே நஞ்சுண்ட ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் இறந்து கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் உடலைகைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
News September 18, 2025
தேனியில் கேரளா கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்

கம்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நேற்று (செப்.17) சம்பந்தப்பட்ட இடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கழிவுகளை கொட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தி அனுமதிக்கப்பட்டனர்.