News June 27, 2024
சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி

மாவட்ட அளவில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 100 பேர் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில், நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி, நுகர்வோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட துறை சார்ந்த பிரச்னைகளை தீர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
Similar News
News December 5, 2025
புதுச்சேரி: சுகாதாரத் துறைக்கு கண்டனம்

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த போலி மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், ரசாயன கலவைகள் எல்லாம் எங்கிருந்து பெறப்பட்டன. அனுமதி இல்லாமல் புதுச்சேரிக்குள் அவை எப்படி துழைந்தன. இதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இயங்குகின்றனர், இது குறித்து பொதுமக்களுக்கு இந்த அரக வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். இது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
News December 5, 2025
BREAKING: விமான டிக்கெட் விலை விறுவிறுவென உயர்ந்தது

இண்டிகோ ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை – பெங்களூரு ₹3,129 என இருந்த டிக்கெட் விலை ₹20,599, ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – திருச்சி ₹3,129 to ₹14,961, சென்னை – திருவனந்தபுரம் ₹6,805 to ₹34,403, சென்னை – மும்பை ₹5,980 to ₹42,448, சென்னை – டெல்லி ₹7,746 to ₹32,782 வரை உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News December 5, 2025
கூடங்குளம் அணுமின் நிலையம்: புடின் நம்பிக்கை

கூடங்குளத்தில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்து வருவதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அங்குள்ள 6 அணு உலைகளில் 3 உலைகள் இந்தியாவின் எரிசக்தி வலையமைப்புடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறினார்.


