News August 14, 2024
சுதந்திர போராட்ட தியாகி 103 வயதில் காலமானார்

ஒசூர் அடுத்த பெட்டமுகிலாலம் மலைக்கிராமத்தில் 1921 இல் பிறந்தவர் C.M.மரிசாமி கவுடா “வெள்ளையனே வெளியேறு” “உப்பு சத்தியா கிரகம்” உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று இந்திய விடுதலைக்காக போராடிய மரிசாமி கவுடா முன்னாள் முதல்வர் காமராஜர், கக்கன் ஆகியோரிடம் நன்கு பழகியவர். இன்று 103 வயதில் வயது மூப்புக்காரணமாக காலமானார். அவருக்கு பல தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
கிருஷ்ணகிரி: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். <
News November 24, 2025
கிருஷ்ணகிரி: ரூ.15000 மானியம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் & பழங்குடியினருக்கு புதிய மின்மோட்டார் மாற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நுண்ணீர் பாசனம் அமைத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: சிட்டா, வரைபடம், ஜாதிச்சான்று, மார்பளவு புகைப்படம், ஆதார். மானியம் மின் மோட்டார் விலையின் ரூ.15000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 94430 83493 க்கு தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


