News August 14, 2024
சுதந்திர போராட்ட தியாகி 103 வயதில் காலமானார்

ஒசூர் அடுத்த பெட்டமுகிலாலம் மலைக்கிராமத்தில் 1921 இல் பிறந்தவர் C.M.மரிசாமி கவுடா “வெள்ளையனே வெளியேறு” “உப்பு சத்தியா கிரகம்” உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று இந்திய விடுதலைக்காக போராடிய மரிசாமி கவுடா முன்னாள் முதல்வர் காமராஜர், கக்கன் ஆகியோரிடம் நன்கு பழகியவர். இன்று 103 வயதில் வயது மூப்புக்காரணமாக காலமானார். அவருக்கு பல தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
கிருஷ்ணகிரியில் 110 பேர் கைது!

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் பூபதி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 110 பேரை போலீசார் இன்று (டிச.5) கைதுசெய்தனர்.
News December 5, 2025
கிருஷ்ணகிரி: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News December 5, 2025
கிருஷ்ணகிரி மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

▶️நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
▶️ மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
▶️பேரூராட்சிகள்- 06
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா-8
▶️வருவாய் வட்டங்கள் – 8
▶️வருவாய் கிராமங்கள்-636
▶️ஊராட்சி ஒன்றியம்-10
▶️கிராம பஞ்சாயத்து- 333
▶️MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
▶️MLA தொகுதி- 6
▶️மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!


