News August 14, 2024

சுதந்திர போராட்ட தியாகி உடலுக்கு எம்.எல்.ஏ அஞ்சலி

image

பெட்டமுகிலாலம் என்னும் மலைக்கிராமத்தில் 1921 இல் பிறந்தவர் C.M.மரிசாமி கவுடா, “வெள்ளையனே வெளியேறு” உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று இந்திய விடுதலைக்காக போராடிய மரிசாமி கவுடா இன்று 103 வயதில் காலமானார். அவரது உடலுக்கு ஒசூர் எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளரான பிரகாஷ் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Similar News

News December 4, 2025

கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் பெண் தற்கொலை!

image

கிருஷ்ணகிரி, கெலமங்கலம் அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்.இவரது மனைவி காயத்ரி(25). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனா நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். யோதனால் விரக்தியடைந்த காயத்ரி, 6 மாதங்களுக்கு முன் தன் தாய் வீட்டிற்கு சென்றார். பின் அவர், நேற்று முன்தினம் வீட்டிலுள்ள 8 அடி தண்ணீர் தொட்டியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இதனை, அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

கிருஷ்ணகிரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 4, 2025

கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!