News August 15, 2024

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

image

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சை மாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி எம்.பி., தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மேயர் சன் ராமநாதன், எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 2, 2025

தஞ்சை: மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் நேற்று (டிச.01) குருங்குளம் மேற்கு ஊராட்சி அற்புதபுரம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 2, 2025

தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 04-ந்தேதி அன்று நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.01) இரவு 10 மணி முதல் இன்று (டிச.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!