News January 22, 2025
சுகாதார மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் இன்று காலை 10 மணி முதல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அந்த வரிசையில் கத்தாரி பேருந்து நிலையம் அருகே உள்ள சுகாதார மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊராட்சி தலைவர் அனிதா மோகன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
Similar News
News November 3, 2025
திருப்பத்தூர்: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
திருப்பத்தூர்: 30 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்கள், வேலூரில் இருந்து 50 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் நாளை நவம்பர் 4 மாலை முதல் இயக்கப்படுகிறது. பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 3, 2025
திருப்பத்தூர்: ஏலகிரி மலை சென்றவருக்கு நேர்ந்த சோகம்

சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஷாஹித் என்பவர் நேற்று (நவ.02) காரில் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றார். இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


